×

திருப்புத்தூர் அருகே பாரம்பரிய மஞ்சுவிரட்டிற்கு தயாராகும் சிராவயல் களம்

திருப்புத்தூர்: சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே ஜன.17ம் தேதி நடைபெற உள்ள மாபெரும் மஞ்சுவிரட்டிற்கு சிராவயல் திடல் தயாராகி வருகிறது.
சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் அருகேயுள்ள சிராவயலில் பாரம்பரிய மஞ்சுவிரட்டு ஆண்டுதோறும் தை மாதம் மாட்டுப்பொங்கல் மறுநாள் நடைபெறும். இவ்விழாவிற்காக தொழுவின் முன்பகுதியில் இருபுறங்களிலும் கல்லுக்கால் வைத்து ஊண்டி தடுப்பு அமைப்பது உள்ளிட்ட தேவையான பணிகளை கிராமத்தினர் செய்து வருகின்றனர். மஞ்சுவிரட்டு நடைபெறும் ஜன.17ம் தேதியன்று காலை 11 மணிக்கு கிராமத்தில் உள்ள பெரியநாயகி அம்மன், தேனாட்சி அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும்.

தொடர்ந்து முன்னோர் வழிபாடு செய்து நாட்டார்களை அழைத்துக் கொண்டு வானவேடிக்கை, மேளதாளத்துடன் மஞ்சுவிரட்டு தொழுவிற்கு கிராமத்தினர் வருவார்கள். அதனை தொடர்ந்து தொழுவில் உள்ள அனைத்து மாடுகளுக்கும் வேஷ்டி, துண்டு அணிவித்து மரியாதை செய்யப்படும். முதலில் கோயில் காளைகள் அவிழ்த்துவிட்ட பின்னர் மஞ்சுவிரட்டு காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்துவிடப்படும்.

இந்த மஞ்சுவிரட்டிற்கு சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான காளைகள் பங்கேற்கும். இதைக்கான வெளிநாட்டவர்களும், தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் திரளுவார்கள். இதனால் திருப்புத்தூர், சிராவயல், தென்கரை, அதிகரம், கிளாமடம், மருதங்குடி, கும்மங்குடி உள்ளிட்ட பல கிராமங்கள் இப்போதே திருவிழா கோலம் பூண்டு வருகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chiravayal Field ,Tirupattur ,Manfred , Tirupputtur, mancuvirattu, ciravayal Field
× RELATED திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே...